• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திண்டுக்கலில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் வெட்டி படுகொலை

November 24, 2017 தண்டோரா குழு

திண்டுக்கல்லில் வெவ்வேறு இடங்களில் 3 துப்புரவு பணியாளர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் சோலைஹால் நெட்டு தெருவில் வசித்து வருபவர்கள் பாலமுருகன், சரவணன், வீரன் என்ற வீரையா. இவர்கள் 3 பேரும் தனியார் நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இதில் சரவணன் (40) மற்றும் வீரன் என்ற மதுரைவீரன் (42) அண்ணன் தம்பி ஆவார்கள். இவர்கள் இன்று (நவ 24) காலை வழக்கம் போல் துப்புரவுப் பணிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் பாலமுருகன் (38) திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உள்ள டீச்சர்ஸ் காலணியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி அறிவாள் போன் பயங்கர ஆயுதங்களால் பாலமுருகனை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் உயிரிழந்தார்.

இதனையடுத்து பேருந்து நிலையிலம் அருகே உள்ள சௌராஸ்டிரா புரத்தில் துப்புரவு பணியிலிருந்த சரணனை அதே கும்பல் வெட்டி சாய்த்தது. இதனையடுத்து நாகல் நகர் ரயில் நிலையம் அருகே உள்ள பாவா லாட்ஜ் அருகே துப்புரவு பணியிலிருந்த வீரன் என்ற மதுரைவீரனை அதே கும்பல் வெட்டி சாய்த்தது.

திண்டுக்கல்லில் இதுவரை இல்லாத அடுத்தடுத்து 3 வெவ்வேறு இடங்களில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் இச்சம்பவம் நடைபெற்றிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த 3 துப்பரவு பணியாளர்கள் உடலை கைப்பற்றி உடற்கூரு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பார்வையிட்டார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக 3 கொலை நடைபெற்றிருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க