• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் இயக்கம் துவங்கியது

July 30, 2016 தண்டோரா குழு

கடந்த ஒரு மாதகாலமாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாகக் காவிரி ஆற்றில் அதிகளவு நீர் வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி என்ற அளவிற்கு உயர்ந்தது.

கர்நாடகா பகுதியில் மேலும் கனமழை பெய்து வந்ததால் நீர்வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் பரிசல் இயக்கத்திற்குக் கடந்த 16ம் தேதி முதல் மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடை விதித்தது.

பின்னர் நீர் வரத்து படிப்படியாகக் குறைந்து தற்போது விநாடிக்கு 6,000 கன அடியாகச் சரிந்தது. இருப்பினும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனக் கருதிய மாவட்ட நிர்வாகம் பரிசலுக்கான தடையை நீக்கவில்லை.

நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் இனி மீண்டும் வெள்ளம் வரக் காலதாமதம் ஆகும் என்ற காரணத்தாலும், அடுத்த மூன்று நாட்களுக்குள் ஆடிப்பெருக்கு விழா வருவதாலும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி தற்போது மீண்டும் பரிசல் இயக்கத்திற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனால் சனி, ஞாயிறு, மற்றும் ஆடிப்பெருக்கு விழாவிற்கு அருவியைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க