• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

3 பேர் விடுதலை செய்யப்பட்டதில் எந்த அரசியலும் இல்லை – அமைச்சர் சி.வி.சண்முகம்

November 20, 2018 தண்டோரா குழு

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் செய்யப்பட்டதில் எந்த அரசியலும் இல்லை என சட்டதுறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது,தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண் பல்கலைக்கழக பேருந்துக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.இதில் பேருந்தில் சிக்கிக் கொண்ட கோகிலவாணி,ஹேமலதா,காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாகினர்.

இந்த வழக்கில் வழக்கில் நெடுஞ்செழியன்,மாது,முனியப்பன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.இதற்கிடையில்,எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இவர்கள் மூவரும் வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி சண்முகம்,

“3 பேர் விடுதலை செய்யப்பட்டதில் எந்த அரசியலும் இல்லை என்றார்.மேலும்,7 பேர் விடுதலையில் ஆளுநர் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை.அவர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்”.

மேலும் படிக்க