• Download mobile app
18 Nov 2025, TuesdayEdition - 3569
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தில்லி, மும்பை, சண்டீகரில் வருமான வரி சோதனை

November 11, 2016 பா.கிருஷ்ணன்

ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த நோட்டுகளை குறைந்த விலைக்கு விற்போர், பழைய ரூபாய் நோட்டுகளுக்கு அதிக விலையில் தங்கம் விற்கும் வியாபாரிகள், ஹவாலா வணிகர்கள் ஆகியோரிடம் வருமான வரி சோதனை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

தில்லி, மும்பை, சண்டீகர் ஆகிய நகரங்களில் இந்த சோதனை தீவிரமாக நடத்தப்பட்டது.

அவர்கள் கடந்த 8ஆம் தேதி நிலவரப்படி கைவசம் வைத்திருக்கும் இந்திய ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை எழுத்துமூலம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, மொத்தம் ரூ. 14.2 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகள்புழக்கத்தில் உள்ளன என வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க