October 14, 2017
தண்டோரா குழு
டெல்லியில் திருடப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் கண்டுபிடிக்கப்பட்டது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு சொந்தமான வேகன் ஆர் காரில் கடந்த வியாழக்கிழமை டெல்லி தலைமைச் செயலகம் சென்றார்.பின்னர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்ற போது அவரது காரை அங்கு காணவில்லை.
அக்கம்பக்கங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தலைமை செயலகத்தில் அதிக பாதுகாப்பு இருந்தும் முதல்வரின் காரை மர்ம நபர் திருடிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, திருடு போன கார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியபாத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த காரை கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் குந்தன் ஷர்மா என்பவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.