• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு மீண்டும் கட்டாயத் தேர்வு

November 15, 2016 பா.கிருஷ்ணன்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10வது வகுப்புக்கான பொதுத் தேர்வு மீண்டும் கட்டாயமாக்கப்படுகிறது. இது 2017-18ம் ஆண்டிலிருந்து அமலுக்கு வரும் என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சருடன் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, நிருபர்களிடம் சாதாரண முறையில் அவர் பேசியதாவது:

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கினாலும், 8 ஆவது வகுப்பு, 5 ஆவது வகுப்புகளுக்கான தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்.

தேர்வுகளைக் கட்டாயமாக்குவதன் முக்கிய நோக்கம் கல்வித் தரத்தை மேம்படுத்துவது, குறிப்பாக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதுதான்.

ராஜஸ்தானில் பள்ளிக் கல்வித் துறையில் பல புதுமைகளைப் புகுத்தி, கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் கல்வியின் தரம் அதிகரித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ராஜஸ்தானில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களது சேர்க்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது” என்றார் பிரகாஷ் ஜவடேகர்.

மேலும் படிக்க