• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காட்டுயானையை அச்சுறுத்தும் செங்கல் சூளை ஊழியர்கள்

December 19, 2017 தண்டோரா குழு

கோவை அருகே காட்டுயானையை அச்சுறுத்தும் செங்கல் சூளை ஊழியர்கள் நேரடி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கோவை மாவட்டம் தடாகம், கனுவாய்,மாங்கரை பகுதியில் 100 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது.இந்த செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைக்க பனைமரம் பயன்படுத்தப்படுகிறது.இந்த பனைமரத்தில் உள்ள கூழை சாப்பிடவும் தண்ணீர் அருந்தவும், நாள் தோறும் காட்டுயானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் அவ்வாறு பனைமரத்தை சாப்பிட வந்த ஒற்றையானையை செங்கல் சூளை ஊழியர் ஒருவர் தொந்தரவு செய்வதும்,பின்னர் அந்த யானையை சீண்டுவதும் யானை அந்த ஊழியரை துரத்தி வருவதையும் அருகில் உள்ள நபர் ஒருவர் தனது செல்பொன் மூலம் பதிவு செய்துள்ளார்.

மேலும்,கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே போன்று காட்டுயானைகளை,இளைஞர்கள் சிலர் தொந்தரவு செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த காட்சிகள் வேதனையை தரும் வகையில் உள்ளது.உடனடியாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க