• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வால்பாறையில் தொழிலாளியை தாக்கிய காட்டெருமை

December 7, 2017

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டெருமை தாக்கி கிருஷ்ணசாமி என்பவர்
படுகாயமடைந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு தேயிலை தோட்ட கழக எஸ்டேட்டில் காட்டெருமை தாக்கியதில்
கிருஷ்ணசாமி என்பவர் படுகாயமடைந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் வனவிலங்குகள் தொடர்ந்து தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து தொழிலாளர்களை தாக்கி வருகிறது.இந்நிலையில் இன்று(டிச 7) காலை சின்னக்கல்லாறு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக எஸ்டேட்டுக்குள் ஒற்றை காட்டெருமை புகுந்தது. இதனையடுத்து பணியில் இருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து பதறியடித்து ஓடினர்.

அப்போது அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த கிருஸ்ணசாமி என்பவரை காட்டுடெருமை தாக்கியது, இதில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதனைதொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேயிலை தோட்டத்திற்குள் தொடர்ந்து காட்டுடெருமை புகுந்து வருவது குறித்து பல முறை வனத்துறையிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க