• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை !

October 12, 2017 தண்டோரா குழு

கோவை உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியை சேர்ந்த சுபேர் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சிறப்பு புலனாய்வு தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் கோட்டைப்புதுர் ஜி.எம் நகரைச்சேர்ந்த சுலைமானின் மகன் சுபேர்( 33 ).இவர் பாலக்காட்டிலிருந்து ஒலவக்கோடு செல்லும் வழியில் அப்ஹோல்சரி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை முடித்து வீடு திரும்பாததால் நேற்று அவரது குடும்பத்தினர் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் காவல்துறை துணை ஆணையாளரை சந்தித்து சுபேர் குறித்து விசாரித்தனர்.பின்னர் மாநகர காவல்துறை ஆணையாளரையும் சந்தித்து பேசினர்.

அவர்களிடம் சுபேரை பிடித்து சிறப்பு புலனாய்வு தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும்.இன்று காலை சுபேரை, குடும்பத்தினர் சந்திக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்ததாக சுபேரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அபுதாஹீர் வழக்கில் தொடர்பு உள்ளதா என குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறை அதிகாரிகள் கேட்டதாகவும் கூறினர். மேலும் சுபேதர் மீது காவல்துறையில் எந்த வழக்கும் இல்லை என தெரிவித்தனர்.

மேலும் படிக்க