• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

SVS பொறியியல் கல்லூரியில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

December 28, 2017 தண்டோரா குழு

கோவை SVS பொறியியல் கல்லூரியில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மயிலேறிபாளையத்தில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான svs பொறியியல் கல்லூரி உள்ளது.இந்த கல்லூரியில் நேற்று  காலை  முதல் வருமான வரித்துறை சோதனை நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில்,இந்த வருமான வரி சோதனை மிடாஸ் மற்றும் அந்த நிறுவனத்துடன் வணிக ரீதியாக தொடர்புடைய நிறுவனங்களில் நடத்தப்படும் சோதனையின் ஒரு பகுதியாகவே வருமானவரித் துறையினர் SVS பொறியியல் கல்லூரியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்,இந்த சோதனையில் கல்லூரி அலுவலகத்தில் உள்ள சந்திரசேகரின் அறையில் இருந்து
முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகின்றது. கல்லூரி அலுவலக 
வளாகத்தில் சோதனை நடப்பதையடுத்து அலுவலக ஊழியர்களின்செல்போன்களை பறிமுதல் செய்தனர்.வருமான வரித்துறையினர் நேற்று  இரவு முழுவதும் சோதனை நடைபெற்று வந்த நிலையில், இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க