• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தற்கொலை முயற்சி

January 19, 2018 தண்டோரா குழு

குடும்ப பிரச்னை காரணமாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த விஜய்குமார் என்பவர் கோவையை சேர்ந்த தீபா என்பவரை 12 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். தீபா மதுரையில் பேராசியராக உள்ள நிலையில், விஜயகுமார் சட்டப்படிப்பை பாதியிலேயே முடித்து வேலை இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே விஜய்குமார்-தீபா பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கோவை குடும்ப நல நீதிமன்றத்தில் தீபா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.இம்மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது. இந்த விசாரணைக்கு விஜயகுமார் தனது தாயுடன் வந்துள்ளார்.

இந்த வழக்கு விவகாரத்தில் விஜயகுமாருக்கு உடன்பாடு இல்லாததால், இருவருக்கும் நீதிமன்ற வளாகத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, விஜயகுமார் தான் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.உடனே அருகிலிருந்த நீதிமன்ற ஊழியர்கள் விஜயகுமாரை மீட்டு, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகுமார் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குடும்ப பிரச்னை காரணமாக விஜயகுமார் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். பந்தைய சாலை காவல்துறையினர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க