October 26, 2018
தண்டோரா குழு
கோவை அரசுக் கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாடிய மாணவியின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை அரசு கலைக் கல்லூரியில்,எம்.ஏ முதலாண்டு படித்து வரும் மாணவி மாலதி.இவர் கடந்த மாதம் 28-ம் தேதி கல்லூரி மைதானத்தில் மாணவ, மாணவிகளுடன் இணைந்து அனுமதியின்றி பகக்சிங் பிறந்தநாள் கொண்டாடியுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து,கல்லூரி முதல்வரின் ஆணையை மீறி மாணவர்களை அழைத்து கூட்டம் நடத்தியமைக்கு உரிய விளக்கம் தருமாறும்,அதுவரை அம்மாணவியை தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதாக தபால் மூலம் அம்மாணவிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டங்கள் எழுந்தன.இந்நிலையில்,மாணவியின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும்,விதிகளின்படி செயல்படுவேன் என கடிதம் எழுதி தருமாறு மாணவி மாலதிக்கு கல்லூரி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.