• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகுமார் கொலை வழக்கில் கைதான முபாரக்கிற்கு ஜனவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவல்

December 26, 2017 தண்டோரா குழு

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை வழக்கில் கைதான முபாரக்கை வரும் ஜனவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கடந்தாண்டு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சசிகுமார் கொலை வழக்கில் ஏற்கனவே, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக்கை நேற்று பொள்ளாச்சி அருகே சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து, கோவை சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது, கைதான முபாரக்கை வரும் ஜனவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க