• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு லோக நாயக சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு

December 19, 2017 தண்டோரா குழு

கோவையில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு புலியகுளம் பகுதியிலுள்ள லோக நாயக சனீஸ்வர பகவான் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.

சனீஸ்வர பகவான் ஆண்டுதோறும் ஒவ்வொரு ராசியிலிருந்தும் வேறு ராசிக்கு இடம் பெயர்ந்து வருவதாக ஐதீகம்.அதன்படி இன்று சனிப்பெயர்ச்சி என்பதால் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள லோக நாயக சனீஸ்வர பகவான் கோவிலில் இரும்பு எஃகினால் சுமார் ஏழரை அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு வகை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இதனைத்தொடர்ந்து யாக வேள்விகள் வளர்க்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபமேற்றி சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.சனி பகவானுக்கு இரும்பு எஃகினால் சிலை வைக்கப்பட்டுள்ளது கோவையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க