• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு லோக நாயக சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு

December 19, 2017 தண்டோரா குழு

கோவையில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு புலியகுளம் பகுதியிலுள்ள லோக நாயக சனீஸ்வர பகவான் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.

சனீஸ்வர பகவான் ஆண்டுதோறும் ஒவ்வொரு ராசியிலிருந்தும் வேறு ராசிக்கு இடம் பெயர்ந்து வருவதாக ஐதீகம்.அதன்படி இன்று சனிப்பெயர்ச்சி என்பதால் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள லோக நாயக சனீஸ்வர பகவான் கோவிலில் இரும்பு எஃகினால் சுமார் ஏழரை அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு வகை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இதனைத்தொடர்ந்து யாக வேள்விகள் வளர்க்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபமேற்றி சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.சனி பகவானுக்கு இரும்பு எஃகினால் சிலை வைக்கப்பட்டுள்ளது கோவையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க