• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய அரசு திட்டம் மூலம் கோவையில் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.45 ஆயிரம் டெபாசிட்

July 3, 2018 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் பணம் டெபாசிட் ஆகி உள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வெள்ளமடை ஊராட்சி காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிருந்தா.இவர் சாமிநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள கனரா வங்கியில் கடந்த 2014 ம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கினார்.

இந்நிலையில் கடந்த 28ம்தேதி இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.அதில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து பிருந்தா தனது வங்கி கணக்கை சரிபார்த்த போது கணக்கில் ரூ.45 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிருந்தா தனது கணவர் அன்புசெல்வனுடன் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளை சந்தித்து இதுபற்றி தெரிவித்துள்ளார்.

அப்போது வங்கி அதிகாரி,பெண்கள் வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் பணம் தருகிறது.அந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு பணம் வந்திருக்கும் என்று கூறியுள்ளார்.ஆனால் பிருந்தா இதுவரை எந்த திட்டத்திற்காகவும் விண்ணப்பிக்கவில்லை என்றும்,அதனால் தனக்கு பணம் வருவதற்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டத்தின் மூலம் பணம் வருகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதி மக்கள் எல்லோரும் அந்த திட்டத்தில் சேர முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க