• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயர்சிகிச்சைகளை வழங்க பிரீசினியஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை

November 2, 2018 தண்டோரா குழு

உலகின் தலைசிறந்த டயாலிசிஸ் சேவை வழங்கும் நிறுவனமான பிரீசினியஸ்,கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து புதிய டயாலிசிஸ் சேவை மையம் தொடங்குவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டது.பிரீசினியஸ் மருத்துவமனை,தமிழகத்தை மையமாக கொண்டதும்,தேசிய மருத்துவமனை மற்றும் சுகாதார சேவை அங்கீகார மையத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனமும் ஆகும்.இந்த மருத்துவமனை 12 இடங்களில் டயாலிசிஸ் சேவை நிலையங்களை தொடங்க உள்ளது.இது கோவையில் அதிகாரிக்கும் டயாலிசிஸ் சேவைக்கு மிக முக்கிய பங்களிப்பாக உள்ளது.

இதுகுறித்து பிரீசினியஸ் மருத்துவ சேவை மையத்தின் நிர்வாக இயக்குனர் புனித் கோலி கூறுகையில்,

“இந்தியாவில் டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் என்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இந்நிலையில் சிறந்த முறையில் டயாலிசிஸ் சிகிச்சை வழங்கும் புதிய மையங்கள் அவசரத் தேவையாக இருக்கின்றன.இப்போது தொடங்க உள்ள புதிய மையம்,நோயளிகளுக்கு அதிநவீன சிகிச்சையை சிறந்த மருத்துவ வல்லுனர்கள் மற்றும் செளகரியத்தை வழங்க இருக்கிறது.ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து கோவை வட்டாரத்தில் சிறுநீரக கோளாறுகளால் அவதியுறும் நோயாளிகளின் தேவைகளுக்கான புகலிடமாக விளங்கும் புதிய சேவை மையத்தை உருவாக்கி உள்ளோம்”.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க