• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்

December 28, 2017 தண்டோரா குழு

கோவையில் சுரங்க பாதை அமைக்காததைக் கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு ரயில்வே மேம்பாலத்தில் சுரங்க பாதை அமைக்காத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பீளமேடு பகுதியில் கடந்த 2011 ம் ஆண்டு துவங்கப்பட்ட ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து, கடந்த டிசம்பர் 3 ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க சுரங்க பாதை அமைக்கப்படுமென சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்திருந்தது.ஆனால் இதற்கான பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை.

இந்நிலையில்,இதனை கண்டித்து முருகன் நகர், ஹட்கோ காலணி உள்ளிட்ட பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும், சுரங்க பாதை அமைக்காததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், சுரங்கபாதை பணிகளை உடனடியாக துவக்கவில்லை எனில் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க