• Download mobile app
05 Sep 2026, SaturdayEdition - 3860
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குதிரையில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு!

October 8, 2018 தண்டோரா குழு

பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டிய நிலையில் பொதுமக்கள் கடும் சிரமத்கிற்கு உள்ளாகியுள்ளனர்.இதனை கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றதை தொடர்ந்து மத்திய அரசு கடந்த வாரம்2.50 ரூபாயை குறைத்தது.தற்போது 85.26 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலும்,டீசல் விலை 78.04 விற்கபட்டு வருகிறது.

இந்த விலை உயர்வை கட்டுபடுத்த மத்திய அரசு விலை குறைத்து போல மாநில அரசும் அதிகாரதிற்கு உட்பட்டு விதிக்கும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க வலியுறுத்தி ஹிந்து மக்கள் பரிஷத் அமைப்பினர் குதிரையில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

மேலும்,மக்களின் சிரமத்தை போக்கிட மாநில அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அக்கட்சியினர்,இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் மக்கள் மாட்டு வண்டி,குதிரை வண்டிகளில் அதிகம் பயணிக்க நிலைக்கு தள்ளபடுவார்கள்.எனவே உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.குதிரையுடன் மனு அளிக்க வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க