December 12, 2017
தண்டோரா குழு
கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி, காவல்துறை மீது வழக்கு தாக்கல் செய்ததற்காக சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்ட புகார் தொடர்பாக காவல் துறையினர் மீது இன்று வரை வழக்கு பதிவு செய்யவில்லை.மதுரை வழக்கறிஞர் முருகன் மாவோஸ்ட் வழக்காடிகளுக்கு வாதாடியதற்கு அவ்வழக்கிலேயே அவரை ஒரு குற்றவாளியாக சேர்த்ததை கண்டித்தும்,மேலும்,நீதிமன்ற கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.