• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்: சாலையில் மறியலில் மக்கள்

September 26, 2018 தண்டோரா குழு

கோவை கணபதி அருகே நேற்று மாலை பெய்த கனமழையில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கணபதி சங்கனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன் தினம் மற்றும் நேற்று மாலை கனமழை பெய்தது.இதன் ஒரு பகுதியாக கணபதி அடுத்த காமராஜபுரம் பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.இதனால் வீடு முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்த நிலையில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பார்க்காமலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும் இருந்ததையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை கணபதி சங்கனூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீடுகளுக்குள் புகுந்து வெள்ளத்தை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளிடம் பரிந்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.சாலை மறியல் காரணமாக கணபதி சங்கனூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க