• Download mobile app
14 Apr 2026, TuesdayEdition - 3716
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்

October 9, 2018 தண்டோரா குழு

சேலம் சங்ககிரியை சேர்ந்த பழனியப்பனின் மகன் செல்வம் என்ற செல்வராஜ் (31).இவர் பீளமேடு பகுதியில் கடந்த 2015ம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் தண்டனை பெற்று ஆயுள் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட இவரை இவரது மனைவி வாரம் வாரம் வந்து மனுப்போட்டு சந்திப்பது வழக்கம்.ஆனால் மனைவிக்கும் செல்வராஜுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் கோபத்தில் இருந்த மனைவி செல்வராஜை சுமார் மூன்று மாதங்களாக வந்து பார்க்கவில்லை.இதனால் மனம் உடைந்து போன கைதி செல்வராஜ் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அறுக்கும் கம்பிகளை வைத்து இடது மணிக்கட்டில் அறுத்துள்ளார்.கொசு விரட்டி மருந்தையும் குடித்துள்ளார்.

பின்னர் இதையறிந்த சக கைதிகள் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் வந்த சிறைத்துறை அதிகாரிகள் கைதியை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு,தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் உடல்நலம் தேறி வந்து கொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதி செல்வம் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக மருத்துவமனையில இருந்து தப்பி ஓடினார்.இதையடுத்து மருத்துவமனை வளாகம் முழுவதும் காவலர்கள் செல்வத்தை தீவிரமாக தேடினர்.அதேபோல சிறைத்துறை காவலர்களும் கோவை மாநகர போலீசாரும் தப்பித்து ஓடிய சிறைக் கைதியை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மேலும் படிக்க