• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மருத்துவமனையில் கங்கை அமரன் சிகிச்சைக்காக அனுமதி

December 5, 2017 தண்டோரா குழு

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல இசையமைப்பாளரும் இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் பிரேம்ஜியின் தந்தையுமான கங்கை அமரன் உப்புச்சத்து குறைபாடு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கங்கை அமரனை இசையமைப்பாளர் தேவா சந்தித்து நலம் விசாரித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பா.ஜ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கங்கை அமரன். ஆனால், பணப்பட்டுவாடா காரணமாக, அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தற்போது வருகின்ற 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.இதில் பா.ஜ.க சார்பில் மீண்டும் கங்கை அமரன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று பாஜகவின் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க