• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வனப்பாதுகாவலர் அலுவலத்தை இடமாற்றம் செய்யப்படுவதை கைவிட வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மனு

December 4, 2017 தண்டோரா குழு

கோவையில் இயங்கி வரும் புலிகள் திட்ட கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அலுவலத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்யப்படுவதை கைவிட வலியுறுத்தி, புலிகள் வேடமணிந்து வந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று(டிச 4) மனு அளித்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் புலிகள் திட்ட கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம் கடந்த 2012 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அலுவலகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் களக்காடு முண்டாந்துறை தவிர்த்து, முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் ஆகிய மூன்று புலிகள் காப்பகங்கள் கோவை சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள நிலையில், முறையான காரணமின்றி அவ்வலுவலகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்வது அவசியமற்றது என விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும்,புலிகள் திட்ட முதன்மை வனப்பாதுகாவலர் அலுவலகம் தொடர்ந்து கோவையில் செயல்பட வேண்டுமென வலியுறுத்திய விவசாயிகள்,இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க