• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு

November 3, 2018 தண்டோரா குழு

கோவையில் தீபாவளியை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் 155 சிறிய கடைகள் 49 பெரிய நிறுவனங்களில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ஸ்வீட்ஸ் கடைகளில் ஸ்வீட்ஸ்,காரம் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.எனினும்,இந்த ஸ்வீட்ஸ்,காரம் உள்ளிட்டவை தரமாக உள்ளதா? கூடுதல் நிறமிகள் சேர்க்கப்படுகிறதா? பயன்படுத்திய ஆயில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து நமக்கு ஏதும் தெரியாது.இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இது குறித்து ஆய்வுகள் நடத்த உணவு பாதுகாப்புத்துறையின்5 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளார்.

இந்த 5 குழுக்கள் இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் பெரிய சிறிய நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் ஆய்வு செய்து வருகிறது.இதுவரை 155 சிறிய கடைகளும் 49 பெரிய நிறுவனங்களும் பார்வையிடப்பட்டு 68.5 கிலோ அதிக கலர்கலந்த இனிப்பு,13 கிலோ லேபிள் இல்லாத பொருள் மற்றும் 35 லிட்டர் பழைய எண்ணெய் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.மேலும் 9 கடைகளுக்கு ஆய்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.4 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.கடை உரிமையாளர்களுக்கு கீழ கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.அதில்,

1.உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் இருக்க வேண்டும்.
2.சுற்றுப்புறம் மற்றும் இனிப்பு காரம் செய்யப்படும் இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
3.இனிப்புகளுக்கு குறைந்த அளவுகளிலே கலர் பயன்படுத்த வேண்டும்.காரவகைகளுக்கு கலர் பயன்படுத்த கூடாது.
4. பணியாளர்கள் தன் சுத்தம் பேண வேண்டும்.

மேலும் படிக்க