October 29, 2018 தண்டோரா குழு
கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் யானை தாக்கி நஞ்சன் என்பவர் உயிரிழந்தார்.கோவையை அடுத்த போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட இடத்தில்,ஈஷா யோகா மையம் அமைந்துள்ளதன் பின்புறத்தில் தானிக்கண்டி என்னுமிடத்தில் ஏராளமான மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் சென்ற போது திடீரென அவ்வழியாக வந்த காட்டு யானை நஞ்சன் என்பவரை மிதித்துள்ளது.இதனால் சம்பவ இடத்திலேயே நஞ்சன்(43) உயிரிழந்தார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் யானை தாக்கி உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.