• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி

October 29, 2018 தண்டோரா குழு

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் யானை தாக்கி நஞ்சன் என்பவர் உயிரிழந்தார்.கோவையை அடுத்த போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட இடத்தில்,ஈஷா யோகா மையம் அமைந்துள்ளதன் பின்புறத்தில் தானிக்கண்டி என்னுமிடத்தில் ஏராளமான மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் சென்ற போது திடீரென அவ்வழியாக வந்த காட்டு யானை நஞ்சன் என்பவரை மிதித்துள்ளது.இதனால் சம்பவ இடத்திலேயே நஞ்சன்(43) உயிரிழந்தார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் யானை தாக்கி உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க