• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் அதிகளவில் பன்றி காய்ச்சல் பரவி வருவதாக நா.கார்த்திக் எம்எல்ஏ குற்றச்சாட்டு

October 29, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் அதிகளவில் பன்றி காய்ச்சல் – டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது – அரசு மருத்துவமனையில் ஆய்விற்கு பிறகு நா.கார்த்திக் எம்எல்ஏ குற்றச்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் பன்றி – டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு,பன்றி காய்ச்சலுக்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில்,கோவை மாநகர் திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையின் டீன் அசோகனை சந்தித்து தகவல் கேட்டறிந்தார்.இதைத்தொடர்ந்து,டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு,அங்கு நடைபெறும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனைக்கு கடைசி நேரத்தில் வருவதால் சிகிச்சை பலனளிக்காமல் போவதாக,கோவை அரசு மருத்துவமனை டீன் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பன்றி காய்ச்சல்,டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக குற்றம்சாட்டியவர்,எந்த தெருவிற்கு சென்றாலும் காய்ச்சல் பரவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.டெங்கு பரவி வருவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கோவைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்ததால் அவர் செல்லும் வழியெங்கும் கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு அமைக்கப்பட்ட ராட்சத கட் அவுடில் மோதி ரகு என்ற வாலிபர் பலியானார்.இந்த கட் அவுட்டுகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் கூட வழக்கு,தான் தொடர்ந்ததில் இதற்கு விளக்கம் கேட்டு தலைமை செயலாளர்,டிஜிபி,மாவட்ட ஆட்சியரிடத்தில் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க