• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கூலி தொழிலாளி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம்

August 31, 2018 தண்டோரா குழு

கோவையில் கூலி தொழிலாளி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.இவர் அதேபகுதியைச் சேர்ந்த வேலுசாமி என்பவருக்கு சொந்தமான ரேவதி பந்தல் நிலையத்தில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில் கடந்த 29 ம் தேதி வேலைக்கு சென்ற மணிகண்டன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.அந்நிறுவனத்தில் இருந்து உறவினர்களுக்கு அழைத்த ஊழியர்கள் மணிகண்டன் குடித்து விட்டு போதையில் கிடப்பதாகவும்,பந்தலில் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும் மாற்றி மாற்றி கூறியுள்ளனர்.

உறவினர்கள் சென்று பார்த்த போது தலையில் காயத்துடன் மணிகண்டன் உயிரிழந்து கிடந்துள்ளார்.இதையடுத்து மணிகண்டன் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் மணிகண்டன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்,வேலுசாமி உள்ளிட்டோர் அடித்தும்,கழுத்தை நெறித்து கொலை செய்திருப்பதாகவும் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கோவை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.

மேலும்,வேலுசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வேலுசாமி தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும்,கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க