• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பணமதிப்பிழப்பை செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

November 9, 2018 தண்டோரா குழு

பணமதிப்பிழப்பை செய்த மத்திய அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணமதிப்பிழப்பை செய்த மத்திய அரசை கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பிஜேபி மோடி அரசை கண்டித்து காந்தி பார்கில் வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பணம் இழப்பு மக்களுக்கு பணம் குவிப்பு உங்களுக்கா என்றும்,இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை மதத்திற்கான ஆட்சி என்றும் இது காவி ஆட்சி அண்ணாச்சி கருப்பு பணம் என்னாச்சு.கோடி ஊழல் மோடி ஆட்சி ஓடி விடுவாய் ஒளிந்து விடுவாய் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் பதாகைகள் ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஏராளாமான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க