November 9, 2018 தண்டோரா குழு
பணமதிப்பிழப்பை செய்த மத்திய அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணமதிப்பிழப்பை செய்த மத்திய அரசை கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பிஜேபி மோடி அரசை கண்டித்து காந்தி பார்கில் வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பணம் இழப்பு மக்களுக்கு பணம் குவிப்பு உங்களுக்கா என்றும்,இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை மதத்திற்கான ஆட்சி என்றும் இது காவி ஆட்சி அண்ணாச்சி கருப்பு பணம் என்னாச்சு.கோடி ஊழல் மோடி ஆட்சி ஓடி விடுவாய் ஒளிந்து விடுவாய் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் பதாகைகள் ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஏராளாமான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.