• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீட்டிற்குள் புகுந்த யானை!…

December 1, 2017 தண்டோரா குழு

கோவை,பாப்பநாயக்கன்பாளைத்தில் நேற்று இரவு(நவ 30) வீட்டிற்குள் யானை புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த சின்னதடாகம் பாப்பநாயக்கன்பாளைத்திலுள்ள நரசிம்மராஜ் என்பவரின் வீட்டிற்குள் உணவிற்காக யானை மற்றும் குட்டி யானை புகுந்து அங்கே தேடி பார்த்த காட்சி அந்த வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவானது.

கோவை அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைபகுதி, ஆனைக்கட்டி மலைப்பகுதி, பொன்னுத்து அம்மன் கோவில் மலைப்பகுதி ஆகிய மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளன.

இந்த யானைகள் அவ்வப்போது, விவசாய விலை நிலங்களில் புகுந்து வாழை, கரும்பு, தென்னை மற்றும் பயிர் வகைகளை தின்று சேதப்படுத்தி வருகிறது. சில சமயங்களில் ஊருக்குள் புகுந்து ரேசன் கடைகளை உடைத்து அரிசி, பருப்பு, உப்பு போன்ற உணவு பொருட்களை தின்றும் சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி 2 யானைகளுடன் ஒரு குட்டி யானையும் வந்தது. இந்த யானைகள் சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஆசிரியர் காலனி, கணுவாய் கல் குழி அருகே வந்து அங்குள்ள தண்ணீரை குடிக்க வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த யானைகளை விரட்டினர்.

மீண்டும் மலைப்பகுதிக்கு சென்ற யானைகள் மாலையானதும் திரும்ப ஊருக்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சின்னதடாகம் பாப்பநாயக்கன்பாளைத்திலுள்ள நரசிம்மராஜ் என்பவரின் வீட்டிற்குள்ளேயே உணவிற்காக யானை மற்றும் குட்டி யானை புகுந்தது.

அதேபோல மீண்டும் கணுவாய் கல்லுகுழி பகுதியில் 3 யானைகளும் சுற்றி திரிந்து வருகிறது. இது குறித்து வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானைகளை மீண்டும் மலைப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க