• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை செட்டிப்பாளையத்தில் பள்ளி சிறுவன் தற்கொலை

December 8, 2017

கோவை அருகே பள்ளிக்கு செல்லாத மாணவனை பெற்றோர் கண்டித்ததால், எறும்பு சாக்பீசை சாப்பிட்டு கல்லூக்குழியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அருகே பெரியகுயிலி பகுதியை சேர்ந்தவர் எழுமலை. இவரது மகன் சிவா(13) 7 ம் வகுப்பு படிப்பை பாதியில் கைவிட்டு, ஓராண்டாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில்,பெற்றோர்கள் கண்டித்ததால் சிவா மற்றும் அவரது நண்பரான இடையர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஹரிஆனந்துடன்(15) சேர்ந்து எறும்பு சாக்பீஸை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இதை பார்த்த இவர்களின் நண்பர் தினேஷ் அவரது பெற்றோர்களிடம் தலவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,எறும்பு சாக்பீஸை தின்று கல்லுகுழியில் குதித்த சிறுவன் சிவா உயிரிழந்தார்.அவரது ஹரி ஆனந்த் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும்,கல்லுக்குழியில் விழுந்த சிவாவின் உடல் 200 அடி அழத்தில் கிடந்தது. இறந்த சிவாவின் உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்ட செட்டிபாளையம் காவல்துறையினர் பிரேதப்பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க