• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

January 23, 2018 தண்டோரா குழு

கோவையில் பேருந்து கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

தமிழக அரசு வரலாறு காணாத அளவுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இதனைக்கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனயடுத்து மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் காவல் துறையினர் மாணவர்களை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, கலைக்கல்லூரி முன் மாநில அரசுக்கு எதிராக பேருந்து கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

பேருந்து கட்டண உயர்வால் பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்படுவதில்லை எனவும்,நடுத்தர குடும்பத்தைச்சார்ந்தவர்கள் தனது சம்பளத்தில் பாதியை தினமும் 100 ரூபாய் வீதம் பேருந்துக்கு செலவு செய்ய வேண்டி உள்ளதாக குற்றம் சாட்டினர்.

மேலும் அரசு இலவசம் கொடுப்பதற்கு பதிலாக வேலை கொடுத்தால் பிரச்சனை இருக்காது எனவும், ஸ்கூட்டி வேண்டாம் வேலை வேண்டும் என வலியுறுத்தினர். கட்டண உயர்வால் நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அரசு கலைக்கலூரியில் படிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. வேலைக்கு செல்லும் பெற்றோர்களும் பேருந்து கட்டண உயர்வால் வேலைக்கு செல்ல முடியாமல் திணறி வருவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க