• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புரூக்பாண்ட் சாலை இன்று முதல் இருவழி பாதையாக மாற்றம்

December 9, 2017 தண்டோரா குழு

கோவை புரூக்பாண்ட் சாலை மீண்டும் இரு வழி சாலையாக திறந்து விடப்பட்டது.இதனை புதிய மாநகர காவல் ஆணையர் பெரியய்யா இன்று(டிச 9)துவங்கி வைத்தார்.

கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் இருந்து வடகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்த புரூக்பாண்ட் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழிப்பதையாக மாற்றப்பட்டது.

இதனால், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.எனினும், அவினாசி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் பூமார்க்கெட் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைய வேண்டி இருந்ததால்
பூமார்க்கெட் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், சமீபத்தில் கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற பெரியய்யா, மாநகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது, புரூக்பாண்ட் சாலை இரு வழிப்பாதையாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து ஆணையரின் உத்தரவின் பேரில் கடந்த இரு தினங்களாக புரூக்பாண்ட் சாலையை புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து, இன்று காலை 8 மணிக்கு புரூக்பாண்ட் சாலைக்கு வந்த மாநகர காவல்துறை ஆணையர் அந்த சாலையை இருவழிப்பாதையாக மாற்றி திறந்து வைத்தார்.

ஒரு வழி சாலையாக இருந்த போது பொதுமக்கள் கடுமையாக பாதித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இரு வழி சாலையாக திறந்து விடப்பட்டுள்ள்ளதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க