• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் – திமுக வழக்கறிஞர்கள் மனு

December 1, 2017 தண்டோரா குழு

கோவையில் நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம்,திமுக வழக்கறிஞர் அணியினர் இன்று(டிச 1) மனு அளித்தனர்.

கோவை வ.உ.சி மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வரும் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. இதற்காக கோவை மாநகரம் முழுவதும் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டு இருந்த அலங்கார வளைவில் மோதி ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்தார். இதனையடுத்து சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்  உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.இவ்வழக்கில் விதிமுறை மீறிய கட் அவுட்  மற்றும் பேனர்களை அகற்றவும்,பேனர்களை வைக்க அனுமதி பெற்று இருந்தாலும் பொதுமக்களுகு இடையூறு இருந்தால்  அவற்றை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்திரவிடப்பட்டது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்திரவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த திமுக வழக்கறிஞர் அணியினர் , நீதிமன்ற உத்திரவுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிகரனிடம் மனு அளித்தனர்.

மேலும்,இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடமும் மனு அளிக்க இருப்பதாகவும் திமுக வழகறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க