• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக அரசு பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் – ஈஸ்வரன்

November 30, 2017 தண்டோரா குழு

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அலங்கார வளைவினால் உயிரிழந்த ரகுபதி குடும்பத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளார் ஈஸ்வரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“கோவையில் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளால் உயிரிழப்பு ஏற்படுத்தியுள்ளது ஆடம்பர அரசியலின் உச்சக்கட்டம்.இந்த சம்பவத்திற்கு பிறகாவது தமிழக அரசு சாலைகளில் விளம்பர பேனர்கள் வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழக அரசு,பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.ஆர்.கே.நகர். தொகுதியில் பணம் பட்டுவாடவை முழுமையாக தேர்தல் ஆணையம் தடுத்ததாக தெரியவில்லை.ஆனால், ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் திமுக வேட்பாளர் தான் வெற்றிப்பெறுவார்.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அதிக செலவில் நடத்துவதை மக்கள் விரும்புவதில்லை என்பதை ஆளுங்கட்சி புரிந்துக்கொள்ள வேண்டும்.மேலும், மலேசியா மணல் விவகாரத்தில் மேல்முறையீடு செய்யாமல், வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்”.இவ்வாறு அவர் கூறினார்

மேலும் படிக்க