• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆவாரம்பாளையம் லெவல் கிராசிங் மேம்பாலம் கட்டும் பணிக்காக மூடப்படுகிறது

December 6, 2017

கோவை பீளமேடு மற்றும் வடகோயம்புத்தூர் இடையே உள்ள ஆவாரம்பாளையம் லெவல் கிராசிங் நாளை முதல்(டிச 7) மூடப்படுகிறது.

ரயில் தட விபத்துக்களை குறைக்க இந்திய ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக,கோயம்புத்தூர் பீளமேடு மற்றும் வடகோயம்புத்தூர் இடையே உள்ள ஆவாரம்பாளையம் லெவல் கிராசிங் மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட உள்ளது.

இந்நிலையில்,நாளை முதல்(டிச 7)முதல் பீளமேடு மற்றும் வடகோயம்புத்தூர் இடையே உள்ள ஆவாரம்பாளையம் லெவல் கிராசிங் மூடப்பட்டு சத்தி ரோடு மற்றும் புது சித்தாப்பூர் ரோடு வழியாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்காக இந்திய ரயில்வே நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை இணைந்து 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.மேலும்,மேம்பாலப் பணிகள் 30.09.2018 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க