• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண்பல்கலைகழக நூலகத்தில் ஒய்-பை வசதி

October 6, 2017 தண்டோரா குழு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்பல்கலைகழகநூலகத்தில் மாணவர்களுக்காக ஒய்-பை
(wi-fi)இணையதளவசதி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்பல்கலை கழக நூலகத்தில் ஒய்-பை இணையதளவசதி இந்திய வேளாண் அறிவியல் கழகத்தின் நிதியுதவியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூலகத்திலிருந்து சுமார்50மீட்டர் சுற்றளவுக்கு இவ்வசதியை பயன்படுத்தலாம். இந்த வசதி மூலம் மாணவர்கள் அவர்களது மடிக்கணினி அல்லது கைப்பேசியின் உதவியுடன் இணையதளவசதி பெறலாம்.

இதன்மூலம் மாணவர்கள் மின்புத்தகங்கள்,மின்னனுஆய்விதழ்கள்,மற்றும் பிறமின்தரவுதளங்களையு ம்தரவிறக்கம் செய்து குறிப்பெடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். “இந்தவசதியினை24 மணி நேரமும் பயன்படுத்த முடியும் என்பதால் மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை நூலக மின்வளங்களை(e magazine, journals, etc.,)பதிவறக்கம் செய்யவும் படிக்கவும் உபயோகிக்கலாம்,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க