• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 3 நாட்கள் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கம்

November 16, 2018 தண்டோரா குழு

தமிழக அரசின் உத்தரவின்படி கோவை மாநகர காவலர்களுக்காக மன அழுத்தத்தை கையாள்வது குறித்து நடைபெறும் 3 நாட்கள் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவங்கியது.

கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த பயிற்சியில் முதல் 2 நாட்களுக்கு காவலர்களுக்கும்,3ஆம் நாள் காவலர்களுடன் அவர்களது குடும்பத்தினருக்கும் அதாவது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது.மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல் ஆய்வாளர்கள் இருவர் பெங்களூர் சென்று இதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டு,இந்த பயிற்சியை வழங்குகின்றனர்.

பயிற்சியின் முதல் நாளான இன்று 80 காவலர்கள் பங்கேற்றனர்.மன அழுத்தம் ஏற்படும் வழிகள்,அதனை கண்டறிவது நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்,அமைதியான சூழலை உருவாக்கி கொள்வது என பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் காணொளி காட்சிகள் வாயிலாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க