• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வழித்தட பிரச்சனை தொடர்பாக 13 வயது சிறுவன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

September 3, 2018 தண்டோரா குழு

கோவையில் வழித்தட பிரச்சனை தொடர்பாக 13 வயது சிறுவன் மாவட்ட ஆட்சியரிடம் தனியாக வந்து இன்று மனு அளித்தார்.

கோவை மைல்கல் பிள்ளையார் பகுதியை சேர்ந்தவர்கள் நாகேந்திரன் – பூங்கொடி தம்பதி.இவர்களது வீட்டுக்கு செல்லும் வழித்தடம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகின்றது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர்.இந்நிலையில் பொது பணிசூழல் காரணமாக விடுமுறை கிடைக்காத காரணத்தால் தங்களது 13 வயது மகன் நவநீதகிருஷ்ணிடம் மனுவை கொடுத்து அனுப்பினர்.

பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு வந்த மாணவன் நவநீதகிருஷ்ணன் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.பின்னர் வழித்தட பிரச்சனைக்காக பெற்றோரால் வர முடியாத காரணத்தால் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாக பள்ளி மாணவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க