• Download mobile app
12 Jul 2025, SaturdayEdition - 3440
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீதிபதிகள் இனி வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது – தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

October 12, 2018 தண்டோரா குழு

நீதிபதிகள் இனி வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்,உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.அவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரிப்பதை தடுப்பது குறித்து,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் கொலிஜியம் உறுப்பினர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது இனி நீதிபதிகள் வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்கக்கூடாது எனவும்,வேலை நாட்களில் கருத்தரங்கம்,அரசு விழா போன்றவற்றில் அவர்கள் பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி விடுமுறை பயண சலுகைகளையும் நீதிபதிகளுக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி கோகாய் அறிவுறுத்தினார்.அதைபோல் விடுப்பு எடுக்கும் நீதிபதிகளிடமிருந்து வழக்குகள் தொடர்பான கோப்புகளை எடுத்து விடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க