October 12, 2018
தண்டோரா குழு
நீதிபதிகள் இனி வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம்,உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.அவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரிப்பதை தடுப்பது குறித்து,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் கொலிஜியம் உறுப்பினர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது இனி நீதிபதிகள் வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்கக்கூடாது எனவும்,வேலை நாட்களில் கருத்தரங்கம்,அரசு விழா போன்றவற்றில் அவர்கள் பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி விடுமுறை பயண சலுகைகளையும் நீதிபதிகளுக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி கோகாய் அறிவுறுத்தினார்.அதைபோல் விடுப்பு எடுக்கும் நீதிபதிகளிடமிருந்து வழக்குகள் தொடர்பான கோப்புகளை எடுத்து விடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.