• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

70 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் கிடைத்த கிராமம்!

December 18, 2017 தண்டோரா குழு

சத்தீஸ்கரில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில், 7௦ ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முதல் முதலாக மின்சாரம் கிடைத்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் ஜோகர்ப்பத்தா கிராமம் என்னும் பழங்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 7௦ ஆகியும், அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லாததால்,அந்த கிராமம் இருளில் மூழ்கியிருந்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் ராமன் சிங், மின்சாரம் இல்லாத சுமார் 7௦ கிராமங்களுக்கு மின்சார இணைப்புகளை வழங்கியுள்ளார். அவ்வகையில், ஜோகர்ப்பத்தா கிராமத்திற்கு நேற்று
(டிச 17) மின்சார இணைப்பு கிடைத்துள்ளது.

“எங்கள் கிராமத்திற்கு மின்சார இணைப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், எங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் படிக்க மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல், எங்கள் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்ற காண முடியும்” என்று அந்த கிராமத்தின் தலைவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க