• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேராசியர் கண்டித்ததால் சத்தியபாமா கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

November 22, 2017 தண்டோரா குழு

சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவியை, பேராசியர் கண்டித்ததால் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ராகமோனிகா. இவர் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழகத்தில் கணினியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் இராகமோனிகா, சக மாணவி ஒருவரின் விடைத்தாளை பார்த்து தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பேராசிரியர் ஒருவர் ராகோனிகாவை கண்டித்து தேர்வு அறையை விட்டு வெளியே அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

மேலும் மாணவியை ஆடையை கலையச் சொல்லி அவமதித்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் பல்லைக்கழக விடுதிக்குச் சென்ற ராகமோனிகா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் விடுதிக்குச் சென்ற சக மாணவிகள் ராகமோனிகா தற்கொலை செய்து கொண்டதையறிந்து, பல்லைக்கழக நிர்வாகத்தினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செம்மஞ்சேரி போலீசார், இராகமோனிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க