• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

October 24, 2017 தண்டோரா குழு

உயிருடன் உள்ளவர்களின் புகைப்படத்தை கட் அவுட் மற்றும் பேனர்களில் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருலோச்சன் சுந்தரி என்பவர் தமது வீட்டுக்கு அருகே அடிக்கடி பேனர், கட்சி விளம்பரம் வைப்பதால் தொல்லை ஏற்படுவதாக வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 1959-ம் ஆண்டு சட்டத்தை அவ்வப்போது திருத்த வேண்டும்.

நீதிமன்றம் கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் கட் அவுட், பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். அவை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதா என்பதை கண்காணித்து சுத்தமான சூழ்நிலைகள் நிலவ உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மேலும்,உயிருடன் இருப்பவர் புகைப்படம் பேனரில் இடம்பெறக்கூடாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்ப அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க