• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை எழும்பூரில் 1,000 கிலோ நாய்கறி பறிமுதல்!

November 17, 2018 தண்டோரா குழு

சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட 1,000 கிலோ நாய்கறி எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரகசிய தகவலின் அடிப்படையில்,ரயில்வே போலீஸ் மற்றும் அதிகாரிகள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில்,திடீர் சோதனை நடத்தினர்.அப்போது,ரயிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ நாய்கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இது சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல இறைச்சிக் கடையை நடத்தி வரும் கணேஷ் என்பவருக்கு வந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இவர் சென்னையில் உள்ள பல தனியார் உணவகங்களுக்கு இறைச்சி விற்பனை செய்து வருபவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சென்னை ஹோட்டல்களில் சிக்கன்,மட்டன்,பீப் இறைச்சிகளே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ஆயிரம் கிலோ நாய்கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அசைவ பிரியர்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க