• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ். அதிகாரி ஷபீர் கரீமின் மனைவி புழல் சிறையில் அடைப்பு

November 1, 2017 தண்டோரா குழு

யு.பி.எஸ்.சி. தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ். அதிகாரி ஷபீர் கரீமுக்கு உதவி செய்த அவரது மனைவி தனது ஒன்றரை வயது குழந்தையுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான மெயின் தேர்வு கடந்த திங்கட்கிழமை(அக் 30)நடைபெற்றது.இதில், நாங்குநேரி உதவி எஸ்.பி.,சபீர் கரீம் என்பவர், பங்கேற்று தேர்வு எழுதினார். அப்போது, சபீர் கரீம் வசூல்ராஜா பட பாணியில் புளூடூத் மூலம் அவரது மனைவியிடம் பேசியபடி காப்பி அடித்து எழுதியது தெரியவந்தது.

இதையடுத்து, எழும்பூர் போலீசார் சபீரை கைது செய்து விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவருக்கு உதவி செய்த அவரது மனைவியிடமும் விசாரித்து வந்தனர். இந்நிலையில்,தேர்வின் போது ப்ளூடூத் மூலம் காப்பியடிக்க உதவியதாக ஷபீர் கரீமின் மனைவி ஐதராபாத்தில் கைதானர்.

இந்நிலையில் சபீர் கரீமின் மனைவி ஜாய்சி ஜாயை, அவரது ஒன்றரை வயது குழந்தையுடன் இன்று போலீசார்,புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க