• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ். அதிகாரி ஷபீர் கரீமின் மனைவி புழல் சிறையில் அடைப்பு

November 1, 2017 தண்டோரா குழு

யு.பி.எஸ்.சி. தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ். அதிகாரி ஷபீர் கரீமுக்கு உதவி செய்த அவரது மனைவி தனது ஒன்றரை வயது குழந்தையுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான மெயின் தேர்வு கடந்த திங்கட்கிழமை(அக் 30)நடைபெற்றது.இதில், நாங்குநேரி உதவி எஸ்.பி.,சபீர் கரீம் என்பவர், பங்கேற்று தேர்வு எழுதினார். அப்போது, சபீர் கரீம் வசூல்ராஜா பட பாணியில் புளூடூத் மூலம் அவரது மனைவியிடம் பேசியபடி காப்பி அடித்து எழுதியது தெரியவந்தது.

இதையடுத்து, எழும்பூர் போலீசார் சபீரை கைது செய்து விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவருக்கு உதவி செய்த அவரது மனைவியிடமும் விசாரித்து வந்தனர். இந்நிலையில்,தேர்வின் போது ப்ளூடூத் மூலம் காப்பியடிக்க உதவியதாக ஷபீர் கரீமின் மனைவி ஐதராபாத்தில் கைதானர்.

இந்நிலையில் சபீர் கரீமின் மனைவி ஜாய்சி ஜாயை, அவரது ஒன்றரை வயது குழந்தையுடன் இன்று போலீசார்,புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க