• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“நான் பூனை”. பூனை குணம் கொண்ட பெண்ணால் பரபரப்பு.

June 7, 2016 தண்டோரா குழு

உலகில் பல மனிதர்கள் பலவிதமான மன நிலையில் இருப்பது வழக்கம். மன அழுத்தம் அதிகரிக்கும் பொது அவர்களுக்குள் மாற்றங்கள் நடைபெற்று ஒருவர் மற்றவர் போல் நடந்துகொள்வதை மல்டிபிள் பர்சனாலிடி எனக் கூறுவது வழக்கம்.

ஆனால் ஒரு பெண் தன்னைப் பூனையின் இனம் என நினைத்துக்கொண்டு பல செயல்களைச் செய்து வருவது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நனோ என்ற 20 வயதுடைய பெண் நார்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் வசிக்கிறார். இவர் பிறந்தது முதல் அனைத்துக் குழந்தைகள் போலவும் இயல்பாகவே இருந்து வந்துள்ளார். ஆனால் இவர் தனது 16 ஆவது வயதில் தான் ஒரு பூனை என்று நினைக்கத் துவங்கியுள்ளார். பின்னர் அவரது பல்வேறு செயல்பாடுகள் பூனையைப் போலவே காணப்பட்டது கண்டு அவரது பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாகப் பூனைக்கு எவ்வாறு நாய்களைக் கண்டால் ஆகாதோ, அதே போல தனக்கும் நாய்கள் என்றால் பிடிக்காது எனவும் அவை அருகில் வந்தால் நான் தானாக பூனை போல சீற ஆரம்பித்து விடுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தண்ணீரை வெறுப்பதாகவும், தான் தவறான இனத்தில் பிறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மனோதத்துவ மருத்துவர்கள், இது ஒரு வகையான மனோ வியாதிதான். இவர் சிறுவயதில் பெற்றோருடன் அதிகம் இருக்காமல் பூனைகளை அதிகளவு கொஞ்சி மகிழ்ந்திருக்கலாம். அதோடு அளவுக்கு அதிகமாக நெருக்கம் காட்டியிருந்தால் தானும் பூனை என நினைப்பு வரும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மனோபாவத்திலிருந்து அவர் விடுபட முடியும் எனவும், அதற்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் எனவும் உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நனோ தனது வாழ்க்கை முழுவதும் பூனையாகவே வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

நீங்கள் எப்போதாவது எலியைப் பிடித்திருக்கிறீர்களா? என்று நனோவிடம் கேட்டபோது, நான் எலியைப் பிடிக்க முயற்சித்திருக்கிறேன், ஆனால் அதில் எனக்குத் தோல்வியே கிடைத்தது. பூனைகளைப் போன்றே நான்கு கால்களில் நடக்க விரும்புகிறேன்.

சமையலறை சின்க், ஜன்னல் போன்ற இடங்களில் உறங்கவும் விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க