• Download mobile app
18 Apr 2026, SaturdayEdition - 3720
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையால் வருவாய் அதிகரிக்கும்

December 26, 2016 தண்டோரா குழு

ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையால் அரசின் வரி வருவாய் அதிகரித்து கிராமப்புற முன்னேற்றத்துக்கும், தொழில் துறை வளர்ச்சிக்கும் அதிக நிதி ஒதுக்கி நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அருண் ஜேட்லி பேசியதாவது: இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 3.99 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இதன் காரணமாக ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை அதிகரிப்பதால், நிதி விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை மேம்படுவதோடு அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். இதனால் நிதிப் பற்றாக்குறையும் குறையும். கிராமப்புற முன்னேற்றத்துக்கும், தொழில் துறை வளர்ச்சிக்கும் அதிக நிதி ஒதுக்கி நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.

குறு,சிறு தொழில்களுக்கு வங்கிகள் அதிக கடன் வழங்க வாய்ப்பு ஏற்படும் என்பதால் நமது பொருளாதாரம் வளர்ச்சி பாதையை எட்டும்.

இவ்வாறு அருண் ஜேட்லி பேசினார்.

மேலும் படிக்க