• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதலமைச்சர் பற்றி அவதூறு பரப்பியதால் தமிழச்சி மீது வழக்கு பதிவு

September 30, 2016 தண்டோரா குழு

முதலமைச்சர் உடல் நலம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு செய்தி வெளியிட்ட தமிழச்சி என்ற பெண் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலகுறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து அவரை மருத்துவர்கள் கவனித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே முதல்வர் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

தமிழகத்தை சேர்ந்த பெண்ணான தமிழச்சி பிரான்ஸில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இவர் முகநூலில் தமிழச்சி என்ற பெயரில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இவர் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்து விட்டதாக முகநூலில் தனது கருத்தை பதிவிட்டார். இதற்கு முன்னர் சுவாதி கொலை வழக்கில் முகநூலில் கூறிய கருத்துக்கள் மூலம் இவர் பிரபலமானதால் இவரது இந்த கருத்து முகநூலில் தீயாய் பரவியது.

இதையடுத்து, முதல்வர் குறித்து தவறாக அவதூறு பரப்பியதால் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமசந்திரன் தமிழச்சி மீது வழக்கு பதிவு செய்யும் படி புகார் அளித்தார். இதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவுபோலீசார் பிரிவு எண் 153, இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துவது, 505(1)(BC)பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துவது, 505 Clash Act ஆகிய 3 பிரிவுகளின் கீழ் தமிழச்சி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், புதிதாக யாரும் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க