• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்களை திரும்பப் பெற்று வருகிறது மாருதி சுசூகி நிறுவனம்.

June 2, 2016 தண்டோரா குழு

கார் நிறுனங்களின் முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம் தனது பலீனோ மற்றும் டிசையர் ரக கார்களை மேம்படுத்தும் விதமாக சுமார் 77,380 கார்களை திரும்பப் பெற்று வருகிறது.

இது குறித்து அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாருதி சுசூகி நிறுவனம் ஏற்றுமதி செய்த சுமார் 17,231 கார்கள் உள்பட, கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு மே 17ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட 75,419 பலீனோ ரக கார்களில் உள்ள காற்றுப் பையை கட்டுப்படுத்தும் மென்பொருளை மேம்படுத்தும் வகையில் அந்த கார்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டிருந்தது.

மேலும், கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 22ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட 15,995 பலீனோ ரக டீசல் கார்களில் உள்ள எரிபொருள் வடிகட்டியை மாற்றுவதற்காக அந்த கார்கள் திரும்பப் பெறப்படுகிறது.

அதே போல், 1,961 டிசையர் ரக டீசல் கார்களில் எரிபொருள் வடிகட்டியை ஆராய்ந்து மாற்றுவதற்காகவும் திரும்பப் பெறப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதற்காக மாருதி சுசூகி விநியோகஸ்தர்களை கடந்த 31ம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் மாருதி சுசூகி நிறுவனம் கூறியிருந்தது.

மேலும் படிக்க